துக்காராம் மராத்திய மொழியில் இயற்றிய "போலாவா விட்டல..... " என்ற அபங்கத்தின் தமிழாக்கம்.
காட்சி எல்லாம் விட்டலன்
பேச்செல்லாம் விட்டலன்
செயலெல்லாம் விட்டலன்
நினைவெல்லாம் விட்டலன்
நிம்மதி நிறைந்தது -மனதில்
நிரந்தரம் ஆனது
பந்தங்கள் அறுந்தன
பாவங்கள் தொலைந்தன
பரிவு மிகுந்தது - மனதின்
பாரம் குறைந்தது
வேட்கை அகன்றது
வெகுளி மறைந்தது
விட்டலன் வந்தான்- மனதில்
விட்டலன் வந்தான்
துக்காவின் விட்டல, விட்டல .....
( பிழை பொறுத்தருள்க ).
No comments:
Post a Comment