தமிழ் , இசை, குரல் - மூன்றும் முத்தான பாடல்
படம்: ஶ்ரீராகவேந்தர் பாடல்: ஆடல் கலையே தேவன் தந்தது
இசை: இளையராஜா, கவிதை: வாலி குரல் : ஜேசுதாஸ்
ஆடல் கலையே தேவன் தந்தது ;
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது;
1. மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்கத் தாவித் தாவித்தான் வந்தாள்
2. சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின்கொடியோ
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணெனக் காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ
தலைசிறந்த கலைவிளங்க நடைபுரியும் பதுமையோ புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில் பலவித ஜதி ஸ்வரம் வருமோ
குரல்வழி வரும் அணிமொழியொரு சரசபாஷையோ
ஸ்வரங்களில் புதுசுகங்களைத் தரும் சாருகேசியோ
----
No comments:
Post a Comment