Search This Blog

Friday, April 25, 2025

 இசை இறை

பக்திப் பாடல்

கேட்டால் இது

இறையின் இசை

என்று ஒலிக்கும்

 

உந்தன்பாடல்

எல்லாம் இவன்

இசையின் இறை

என்று பறையும்

 

இசைச்சேர்க்கையின்

இமயம் என்றார்

உன்னை

இடை இசையின்

சிகரம் என்றார்

 

ஒன்று ஒன்றாய்

அரிந்ததில்லை

ஒன்றையுமே நான்

அறிந்ததில்லை

 

தெரிந்ததெல்லாம் உன்

திரை இசை

வியந்ததெல்லாம் உன்

உணர்விசை

 

மயக்கும் உந்தன்

குரலிசை

இனிக்கும் நீ அமைத்த

விரலிசை

 

பொதுவாய்க் கொடுக்கும்

பொதுவாம் இறைவன்

புவிக்கு இசையைப்

பொதுவாய்க் கொடுத்தான்

 

மேற்கென்றார் கிழக்கென்றார்

ராப்பென்றார் பாப்பென்றார்

ராக்கென்றார் ரோலென்றார்

ஜாசென்றார் ப்ளூசென்றார்

நாட்டுப்புற பாட்டென்றார்

இந்துஸ்தானி கர்நாடகம்

சிம்பனி இன்னும்பல பிரிவு

 

பிரிவு மேதைகள்

பலர் பலர்

பிரிவில் அடங்காப்

பிறவி மேதைநீ

இத்தனை வகைகளில்

எந்தஇசை கேட்டாலும்

உந்தன் இசை நிழலாடும்

அந்தப்பாடல் போல்

என்று நயம்நாடும்

 

அயல்நாடு என்றாலும்

அடுப்படியி்ல் நின்றாலும்

பயணத்தில் சென்றாலும்

படுக்கையிலே இருந்தாலும்

தொடுவதும் தொடர்வதும்

அன்னக்கிளி முதல் 


ராஜராகங்கள்

ரகரகமாய் ராகங்கள்

ரசரசமாய் பாவனைகள்

தளர்வில்லாத “ஹிட்லிஸ்ட்”

முடிவில்லாத "ப்ளேலிஸ்ட்”

No comments: