Search This Blog

Friday, April 25, 2025

இசைத்தாய்

 இசைத்தாய்

பக்திப் பாடல்
கேட்டால் இது
இறையின் இசை
என்று ஒலிக்கும்

 உந்தன்பாடல்
எல்லாம் இவன்
இசையின் இறை
என்று பறையும்

இசைச்சேர்க்கையின்
இமயம் என்றார்
உன்னை
இடை இசையின்
சிகரம் என்றார்

ஒன்று ஒன்றாய்
அரிந்ததில்லை
ஒன்றையுமே நான்
அறிந்ததில்லை

தெரிந்ததெல்லாம் உன்
திரை இசை
வியந்ததெல்லாம் உன்
உணர்விசை
மயக்கும் உந்தன்
குரலிசை
இனிக்கும் நீ அமைத்த
விரலிசை

 

பொதுவாய்க் கொடுக்கும்
பொதுவாம் இறைவன்
புவிக்கு இசையைப்
பொதுவாய்க் கொடுத்தான்

மேற்கென்றார் கிழக்கென்றார்
ராப்பென்றார் பாப்பென்றார்
ராக்கென்றார் ரோலென்றார்
ஜாசென்றார் ப்ளூசென்றார்
நாட்டுப்புற பாட்டென்றார்
இந்துஸ்தானி கர்நாடகம்
சிம்பனி இன்னும்பல பிரிவு

 

பிரிவு மேதைகள்
பலப்பலர்
பிரிவில் அடங்காப்
மேதை நீ
இத்தனை வகைகளில்
எந்தஇசை கேட்டாலும்
உந்தன் இசை நிழலாடும்
அந்தப்பாடல் போல்
என்று நயம்நாடும்

அயல்நாடு என்றாலும்
அடுப்படியி்ல் நின்றாலும்
பயணத்தில் சென்றாலும்
படுக்கையிலே இருந்தாலும்
தொடுவதும் தொடர்வதும்

அன்னக்கிளி
முதல் 
இன்றுவரை...
இன்னும் பல தசாப்தங்கள் வரை...

இனிய இசை
இளைய இசை


ராஜராகங்கள்
ரகரகமாய் ராகங்கள்
ரசரசமாய் பாவனைகள்
தளர்வில்லாத “ஹிட்லிஸ்ட்”
முடிவில்லாத "ப்ளேலிஸ்ட்”



இசைத்தாய் எங்கும்
இசைத்தாய் என்றும் 
இசைந்தார் யாரும் 
அவர் உணர்வின் 
 இசைத்தாய் நீயன்றோ !!! 




போலாவா விட்டல.....

துக்காராம் மராத்திய மொழியில் இயற்றிய "போலாவா விட்டல..... " என்ற அபங்கத்தின் தமிழாக்கம்.   

காட்சி எல்லாம் விட்டலன்

பேச்செல்லாம்   விட்டலன்

செயலெல்லாம் விட்டலன்

நினைவெல்லாம் விட்டலன்

நிம்மதி நிறைந்தது -மனதில் 

நிரந்தரம் ஆனது


பந்தங்கள் அறுந்தன

பாவங்கள் தொலைந்தன

பரிவு மிகுந்தது - மனதின்

பாரம் குறைந்தது

வேட்கை அகன்றது

வெகுளி  மறைந்தது

விட்டலன் வந்தான்- மனதில்

விட்டலன் வந்தான் 

துக்காவின் விட்டல, விட்டல .....


( பிழை பொறுத்தருள்க ).

ஆடல் கலையே தேவன் தந்தது

தமிழ் , இசை,  குரல் - மூன்றும் முத்தான பாடல்


படம்: ஶ்ரீராகவேந்தர்          பாடல்:  ஆடல் கலையே தேவன் தந்தது

இசை: இளையராஜா,    கவிதை: வாலி    குரல் :  ஜேசுதாஸ்


ஆடல் கலையே தேவன் தந்தது ; 
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது;

1. மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் 
    மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள் 

    வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும் பைங்கிளி
    மான் கூட்டம் மயங்கத் தாவித் தாவித்தான் வந்தாள் 

2. சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் 
    சிற்றிடைதான் கண்பறிக்கும் மின்கொடியோ 

    விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
    பெண்ணெனக் காலெடுத்து வந்ததோ உலா 

    முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
    முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ 

    தலைசிறந்த கலைவிளங்க நடைபுரியும் பதுமையோ புதுமையோ
    சதங்கைகள் தழுவிய பதங்களில் பலவித ஜதி ஸ்வரம் வருமோ
    
    குரல்வழி வரும் அணிமொழியொரு சரசபாஷையோ
    ஸ்வரங்களில் புதுசுகங்களைத் தரும் சாருகேசியோ  

----