Friday, July 16, 2010

வித்யா-சி

மனைவி யல்லள்
மனையின் தலைவியவள்
மனையின் இதயமவள்

விதியென வந்தவளில்லை
வளமையின்
விதையென வந்தவள்

சதியென வந்தவளில்லை
சாதிமல்லியின்
மணமென வந்தவள்

வினையென வந்தவளில்லை
இதயத்தின்
துணையென வந்தவள்

சனியென வந்தவளில்லை
சுவைமிகு
கனியென வந்தவள்

தலைவலியென வந்தவளில்லை
தன்மதியால்
தலைவியாக வந்தவள்

தொல்லையென வந்தவளில்லை
துன்பம் இனி
இல்லையென வந்தவள்

தலையெழுத்தாய் வந்தவளில்லை
விலையில்லாக்
கலையாய் வந்தவள்

வெறும் மணத்தினால் வந்தவளில்லை
உள்ளன்போடு
விரும்பும் மனத்தினால் வந்தவள்

வந்தவள் மட்டுமில்லை
மனம் தந்தவள் - வாழ்வில்
மணம் தந்தவள்
கண்ணென்று உனக்கு
நானில்லை
கருத்தாக எனக்கு
நீ உண்டு

உன்னை வாழ்த்தினால்- அது
எனக்கும் வாழ்த்து
தன்னைத்தான் வாழ்த்துவார் யார்

வணக்கம் அந்த
இறைவனுக்கு
வரமாய் உன்னைத்
தந்தவனுக்கு

என்னோடு  நீ இரு
காம்போடு இலையாக
கடலோடு அலையாக

No comments: