Search This Blog

Thursday, September 11, 2025

 

தமிழ் , இசை,  குரல் - மூன்றும் முத்தான பாடல்


படம்: மைதிலி என்னைக் காதலி               பாடல்: ஒரு பொன்மானை  

இசை, கவிதை: டி. ராஜேந்தர்                                  குரல் :  எஸ்.பி.பி


ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

சலங்கை இட்டாள் ஒரு மாது…சங்கீதம் நீ பாடு…
அவள் விழிகளில் ஒரு பழரசம்… அதை காண்பதில் எந்தன் பரவசம்…

1.  தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி…
    தாமரை பூ மீது விழுந்தனவோ… 
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்…
    படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ…

     காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கு
     இருகால்கள்  இருகால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்…
    
     ஜதி என்னும் மழையினிலே 
     ரதி இவள் நனைந்திடவே… அதில் 
     பரதம்தான் துளிர் விட்டு
     பூப்போல பூத்தாட 
     மனம் எங்கும் மணம் வீசுது… எந்தன் 
     மனம் எங்கும் மணம் வீசுது...

2.  சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்.....
     அரங்கேற அதுதானே உன் கன்னம்…
     மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்…
     நடத்திடும் வானவில் உன் வண்ணம்…

     இடையில் பின் அழகில் இரண்டு குடத்தைக் கொண்ட…
     புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்…

     கலை நிலா மேனியிலே 
     சுளைப் பலா சுவையைக் கண்டேன்…
     அந்த கட்டுடல் மெட்டுடல் உதிராமல் சதிராடி…
     மதி தன்னில் கவி சேர்க்குது…எந்தன் 
     மதி தன்னில் கவி சேர்க்குது……
.

No comments: