Search This Blog

Friday, July 16, 2010

வித்யா-சி

மனைவி யல்லள்
மனையின் தலைவியவள்
மனையின் இதயமவள்

நலம்தரும் விதியாய் – இளமை
வளமையின் விதையாய் 

சதியெனும் உறவாய் – அன்புச்
சுவைமிகு கனியாய்

மெல்லிய மனமாய் – சாதி
மல்லியின் மணமாய்  

இதயத்தின் துடிப்பாய் – வாழ்க்கைப்
பயணத்தின் துணையாய்

விலையில்லாக் கலையாய் – இல்லத் 
தலைவியெனும் தகையாய்

திருவினைப் பயனாய் – நிறை
திருமதியென வந்தாள்

துன்பம் இல்லை எந்நாளும்
இன்பநிறை இல்லே எந்நாளும் 

வெறும் மணத்தினால் 
வந்தவளில்லை
விரும்பும் மனத்தினால் 
வந்தவள்


கண்ணென்று உனக்கு
நானில்லை
கருத்தாக எனக்கு
நீ உண்டு

உன்னை வாழ்த்தினால்- அது
எனக்கும் வாழ்த்து
தன்னைத்தான் வாழ்த்துவார் யார்

வணக்கம் அந்த
இறைவனுக்கு -உன்னை
வரமாய்த் தந்த
தலைவனுக்கு

என்னோடு  நீ இரு
காம்போடு இலையாக
கடலோடு அலையாக

No comments: