மனைவி யல்லள்
மனையின் தலைவியவள்
மனையின் இதயமவள்
நலம்தரும் விதியாய் – இளமை
வளமையின் விதையாய்
சதியெனும் உறவாய் – அன்புச்
சுவைமிகு கனியாய்
மெல்லிய மனமாய் – சாதி
மல்லியின் மணமாய்
இதயத்தின் துடிப்பாய் – வாழ்க்கைப்
பயணத்தின் துணையாய்
விலையில்லாக் கலையாய் – இல்லத்
தலைவியெனும் தகையாய்
திருவினைப் பயனாய் – நிறை
திருமதியென வந்தாள்
துன்பம் இல்லை எந்நாளும்
இன்பநிறை இல்லே எந்நாளும்
வெறும் மணத்தினால்
வந்தவளில்லை
விரும்பும் மனத்தினால்
வந்தவள்
கண்ணென்று உனக்கு
நானில்லை
கருத்தாக எனக்கு
நீ உண்டு
உன்னை வாழ்த்தினால்- அது
எனக்கும் வாழ்த்து
தன்னைத்தான் வாழ்த்துவார் யார்
வணக்கம் அந்த
இறைவனுக்கு -உன்னை
வரமாய்த் தந்த
தலைவனுக்கு
என்னோடு நீ இரு
காம்போடு இலையாக
கடலோடு அலையாக