தமிழ் வணக்கம்
பிறப்பித்த தென்தாய் பிறவியில் நாளும்சிறப்பித்த துன்சுவை இப்புவி மீதினில்கற்றதுவும் பெற்றதுவும் உற்றதுவும் உன்வழிமற்றன இற்றழியும் காண்.எண்ணத்தின் தாயென உள்ளுருக் கொண்டனைவண்ணபல தாயன நூல்பல தந்தனைவற்றாத நீர்ச்சுனை என்றிங்குக் காலம்முற்றாத பேரிளந் தாய்.தானெனத் தன்னை உணர்ந்துத் தவித்திடும்ஊனெனப் பாவிய மெய்யினால் வாழ்வினைத்தேனென என்றும் திளைத்து உனதுபுகழ்வானென உய்ந்தேன் நினைந்து.பொன்னே மணியே மதியே ஒளியேமன்னே அணியே பதியே கதியேஇன்னும் என்னன்ன என்னே எனச்சொல்லிபன்னுவன் உன்புகழ்க் காப்பு.வளம்பல தந்தனை சீர்நெறி தந்தனைவாழ்வுயர் சிந்தனை நேர்படச் செய்தனைசிற்றறிவன் கற்றதினால் பேருவகை தந்தனைநின்மலர்த்தாள் ஏத்துவன்ப ணிந்து.